பாலத்திலிருந்து குதித்த பெண், காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி
கடுகஸ்தொட்டை பாலத்திலிருந்து குதித்த பெண்ணை, ஒரு பொலிஸ் அதிகாரி காப்பாற்றியுள்ளார்,
பாலத்திலிருந்து ஒரு இளம் பெண் கீழே விழுந்ததாக, அப்பகுதிக்கு அருகில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் (103984) ஹேரத்திற்கு உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, உடனடியாக செயல்பட்ட அதிகாரி, பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து அந்த இளம் பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
இளம் பெண் கட்டுகஸ்தொட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர். தற்போது அந்த இளம் பெண் மேலதிக சிகிச்சைக்காக கட்டுகஸ்தொட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைய..
Post a Comment