Header Ads



டேன் பிரியசாத் கொலை, கைதானவர்கள் அதிகரிப்பு


டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இதுவரை 7 பேரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர், டொன் பிரியசாத் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு மீதொட்டமுல்லையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.


இந்நிலையில், இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இதுவரை இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேரை பொலிஸார் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.