Header Ads



மியன்மார் நிலநடுக்கத்தில் 700 முஸ்லிம்கள் உயிரிழப்பு..? பள்ளிவாசல்கள் நிர்மூலம் - மீட்பு நடவடிக்கைகளை தவிர்க்கும் இராணுவம்


7.7 ரிக்டர் அள­வி­லான நில­ந­டுக்­கத்தில் பல பள்­ளி­வா­யல்கள் நிர்­மூ­ல­மா­கி­யுள்­ள­தாக உள்­ளூர்­வா­சிகள் தெரி­வித்­துள்­ளனர். மீட்பு நட­வ­டிக்­கை­களில் முஸ்லிம் பிர­தே­சங்கள் தவிர்க்­கப்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளனர்.


வெள்­ளிக்­கி­ழமை மியான்­மரைத் தாக்­கிய 7.7 ரிச்டர் அள­வி­லான நில நடுக்கப் பேர­ழிவில் சுமார் 700 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­ட­தாக உள்ளூர் முஸ்­லிம்கள் தெரி­வித்­துள்­ளனர்.


புனித ரமழானின் இறுதி வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று ஜும்ஆத் தொழு­கையின் போது நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது, அதன்­போது, பல பர்­மிய முஸ்­லிம்கள் (ரோஹிங்­கி­யாக்கள் அல்லர்) பள்­ளி­வா­யல்­களில் கூடி­யி­ருந்­தனர்.


தாய்­லாந்தில் உள்ள நாடு­க­டந்து வாழும் பர்­மி­யர்­களால் நடத்­தப்­படும் செய்தி வலைத்­த­ள­மான தி இரா­வதி (The Irrawaddy) நில­ந­டுக்­கத்தால் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட மண்­டலே மற்றும் சகாயிங் பகு­தி­களில் 60 பள்­ளி­வா­சல்கள் அழிக்­கப்­பட்­ட­தாக திங்­க­ளன்று ஸ்பிரிங் புரட்சி மியான்மர் முஸ்லிம் வலை­ய­மைப்பை மேற்கோள் காட்டி செய்தி வெளி­யிட்­டது.


இந்த பள்­ளி­வா­சல்­களுள் பெரும்­பா­லா­னவை 19 ஆம் நூற்­றாண்டில் கட்­டப்­பட்­ட­வை­யாகும் எனக் கூறப்­ப­டு­கி­றது.


மண்­டலே, சாகெய்ங், நய்­பிடாவ், பைன்­மனா, பியாவ்ப்வே, யமெதின், தாஸி, மெய்க்­டிலா, கியாக்ஸே மற்றும் பலேக் நக­ரங்­களில் உள்ள பள்­ளி­வா­சல்ளும் குறிப்­பி­டத்­தக்க சேதத்தை எதிர்­கொண்­டுள்­ளன..


‘இந்த மாதம் ரமழான் என்­பதால் வெள்­ளிக்­கி­ழமை தொழு­கையின் போது ஏற்­பட்ட நில­ந­டுக்கம் கார­ண­மாக அதிக உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­ட­தாக நாங்கள் மதிப்­பி­டு­கிறோம். எங்­க­ளிடம் இன்னும் சரி­யான புள்­ளி­வி­வ­ரங்கள் இல்லை, ஆனால் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் கொல்­லப்­பட்­டனர் என்­பது எங்­க­ளுக்குத் தெரியும்,’ என முஸ்லிம் கோ ஷாகி ஊட­கத்­தினால் மேற்கோள் காட்­டப்­பட்­டுள்­ளது.


மியான்­மரின் இரண்­டா­வது பெரிய நக­ர­மான மண்­ட­லேயில் குறைந்­தது 18 பள்­ளி­வா­சல்கள் சேத­ம­டைந்­தன, அவற்றுள் பல 19 ஆம் நூற்­றாண்டின் கட்­டி­டங்­க­ளாகும். அவை ஒரு­போதும் பழு­து­பார்க்­கப்­ப­டி­ருக்­க­வில்லை என்று முஸ்லிம் கோ ஷாகி­யினால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இரா­ணுவ ஆத­ரவு பெற்ற தீவிர தேசி­ய­வாதக் குழு­வான இனம் மற்றும் மதப் பாது­காப்பு சங்கம் (மா பா தா), நாட்டில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதிர்ப்பு உணர்­வு­களை வளர்ப்­பதில் குறிப்­பி­டத்­தக்க பங்கைக் கொண்­டி­ருந்­தது என்றும் கோ ஷாகி­யினால் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


வழக்­க­மான பரா­ம­ரிப்பு பணி­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டு­வ­ததை காரணம் காட்டி 2017 ஆம் ஆண்டு, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் அது தொடர்பில் எச்­ச­ரிக்கை விடுத்­தது.


சேதங்கள் தொடர்­பான ஆரம்ப அறிக்கைகளில் மடாலயங்களைச் சேர்த்திருந்தாலும், அழிவடைந்த சொத்துக்களுள் பள்ளிவாசல்களை இராணுவ ஆட்சிக்குழு பட்டியல் இடவில்லை.


இராணுவ ஆட்சி குழுவின் மீட்புக் குழுக்கள் பள்ளிவாசல்களில் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vidivelli, 


(எம்.ஐ.அப்துல் நஸார்)


No comments

Powered by Blogger.