Header Ads



தேவாலயங்களைத் தாக்கியவர்களை கிறிஸ்தவர்கள், மன்னிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்


இலங்கைக்கு உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழு தேவை, அதே நேரத்தில் இலங்கையை ஒரு வானவில் தேசமாக மாற்ற வேண்டும் என்று மத விவகாரங்கள் மற்றும் புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி இன்று -17- பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழுவை நிறுவுவதில் தனது அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.


 "தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவைப் போல இலங்கையும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.


"ஏப்ரல் 21 ஆம் திகதி நெருங்கி வருகிறது, அன்று தேவாலயங்களைத் தாக்கியவர்களை கிறிஸ்தவர்கள் மன்னிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.