ஐரோப்பா செல்லவிருந்த 10 பேர் இலங்கையில் கைது
ஆடியம்பலம பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குச் சென்று, அங்கிருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளுக்கு இலங்கையில் தங்குவதற்கு வழங்கப்பட்ட விசா காலம் முடிந்து விட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட இவர்கள், இலங்கையிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளை வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment