Header Ads



மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும்..?


தற்போது ஏற்பட்டு மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் அவ்வாறான நிலைமை இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான வழிமுறை தொடர்பில் ஆராய்ந்து வருதவாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.


மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த திடீர் மின்வெட்டு ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.