Header Ads



நவீன மருத்துவத்தில், சிகிச்சை முறையாகும் நோன்பு


Dr. MSM. நுஸைர் MBBS, MD (medicine)


நோன்பு (Fasting) என்­பது இன்­றைய உலகில் ஒரு முக்­கி­ய­மான தலைப்­பாக மாறி­யுள்­ளது. உலகின் மதச்­சார்­பற்ற தன்மை மிக வேக­மாக மக்கள் மத்­தியில் பரவி வரு­கின்ற வேளை­யிலேயே நோன்பு என்­பது எல்­லோ­ரி­டத்­திலும் ஒரு பெரும் வர­வேற்பு பெற்ற ஒன்­றாக தற்­பொ­ழுது மாறி வரு­கின்­றது. மேற்­கத்­தைய நாடு­க­ளி­லேயே நோன்பு இருப்­பது ஒரு சிகிச்சை முறை­யாக இப்­போது அறி­மு­கப்­ப­டுத்தப்பட்­டி­ருக்­கின்­றது. உடல் எடையை குறைப்­ப­தற்கு, உடலில் உள்ள மேல­திக கொழுப்­பு­களை அகற்­று­வ­தற்கு, உடலின் ஆரோக்­கி­யத்தை பேணு­வ­தற்கு மற்றும் மன அழுத்­தத்தை குறைப்­ப­தற்கு என்று பல்­வேறு நோய்­க­ளுக்கும் இந்த நோன்­பி­ருத்தல் ஒரு சிகிச்சை முறை­யாக இப்­போது பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது. இஸ்லாம் ரமலான் மாதத்தில் நோன்பு பிடிப்­பதை கட­மை­யாக்கி, இறை­யச்­சத்தை (தக்­வாவை) அதி­க­ரிப்­ப­தையே அதன் பிர­தான இலக்­காக குறிப்­பி­டு­கி­றது. இருப்­பினும் இறை­யச்­சத்தை அதி­க­ரிப்­ப­தற்­கப்பால் நோன்பு நோற்­பது உடல் மற்றும் மன ஆரோக்­கி­யத்­திற்கும் பல நன்­மை­களை அளிக்­கி­றது என்­ப­தனை ஏற்­க­னவே பல ஆய்­வுகள் உறுதி செய்­துள்ள போதும் சமீ­பத்­திய ஆராய்ச்­சிகள் நோன்பின் அறி­வியல் நன்­மை­களை மேலும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.


நோன்பு இருத்தல் பல நோய்­க­ளுக்கு சிகிச்சை முறை­யாக நவீன மருத்­து­வத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. முதலில், நோன்பு இருத்தல் டயா­பிடீஸ் நோயா­ளி­க­ளுக்கு மிகவும் பய­னுள்­ள­தாக இருக்­கி­றது. நோன்பு இருக்கும் போது உடலில் இன்­சுலின் உணர்­திறன் அதி­க­ரிக்­கி­றது, இது இரத்த சீனியின் அளவை சீராக்க உத­வு­கி­றது. இரண்­டா­வ­தாக, நோன்பு இருத்தல் இதய நோய்­களின் அபா­யத்தை குறைக்­கி­றது. நோன்பு இருத்தல் கொழுப்பு அளவை குறைத்து, இரத்த அழுத்­தத்தை சீராக்கி, இதய ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­து­கி­றது. மூன்­றா­வ­தாக, நோன்பு இருத்தல் புற்­றுநோய் நோயா­ளி­க­ளுக்கு மிகவும் பய­னுள்­ள­தாக இருக்­கி­றது. நோன்பு இருக்கும் போது உடலில் ஓட்­டோ­பேஜி (Autophagy) செயல்­முறை ஏற்­ப­டு­கி­றது, இது புற்­றுநோய் செல்­களை அகற்ற உத­வு­கி­றது.


அதிக எடை குறைப்பில் நோன்பின் பங்கு


அதிக எடை என்­பது இன்­றைய உலகில் ஒரு பெரிய பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. நோன்பு இருத்தல் அதிக எடையை குறைக்க உத­வு­கி­றது. நோன்பு இருக்கும் போது உடலில் சேமிக்­கப்­பட்ட கொழுப்பு எரிந்து சக்­தி­யாக மாற்­றப்­ப­டு­கி­றது. இது உடல் எடையை குறைக்கும் செயல்­மு­றையை துரி­தப்­ப­டுத்­து­கி­றது. மேலும், நோன்பு இருத்தல் பசி உணர்வை கட்­டுப்­ப­டுத்த உத­வு­கி­றது. இது அதி­கப்­ப­டி­யான உணவு உட்­கொள்­ளலை தடுக்­கி­றது. நோன்பு இருத்தல் மனி­தர்­க­ளுக்கு ஒரு சீரான வாழ்க்கை முறையை ஊக்­கு­விக்­கி­றது.


ஈரல் கொழுப்பு (Fatty liver)நோய்க்கு நோன்பு


ஒரே சிகிச்சை முறை


இன்று எம்மில் அதி­க­மா­ன­வர்கள் ஈரலில் கொழுப்பு படியும் ஈரல் கொழுப்பு நோயினால் (Fatty Liver Disease) பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். fatty liver என்­பது இன்­றைய உலகில் ஒரு பெரிய பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. ஈரல் கொழுப்பு நோய் என்­பது ஒரு கடு­மை­யான நோயாகும், இது சரி­யாக சிகிச்சை அளிக்­கப்­ப­டா­விட்டால் ஈரல் செய­லி­ழப்பு அல்­லது ஈரல் புற்­று­நோய்க்கு வழி­வ­குக்கும். நோன்பு இருத்தல் ஈரல் கொழுப்பு நோயை குணப்­ப­டுத்த அல்­லது கட்­டுப்­ப­டுத்த ஒரு சக்­தி­வாய்ந்த முறை­யாக வைத்­தி­யர்­களால் பரிந்­து­ரைக்கப் படு­கி­றது. நோன்பு ஈரலில் உள்ள கொழுப்பை குறைக்­கி­றது, இன்­சுலின் உணர்­தி­றனை மேம்­ப­டுத்­து­கி­றது, உடல் எடையை குறைக்­கி­றது. ஈரல் கொழுப்பு நோயை தடுக்க எந்த மருந்­து­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், ஆரோக்­கி­ய­மான உணவு முறை, வழக்­க­மான உடற்­ப­யிற்சி மற்றும் நோன்பு இருத்தல் போன்ற முறை­களே சிகிச்­சை­யாக பரிந்­து­ரைக்கப்படு­கின்­றன.


நோன்பு உடலின் செல்கள் மற்றும் திசுக்­களை புதுப்­பித்து, கலங்கள் வய­தாக்­கத்தை (Cellular Aging) தடுக்க உதவும் ஒரு சக்­தி­வாய்ந்த செயல்­மு­றை­யாகும். கலங்­களின் வய­தாக்கம் என்­பது உடலின் செல்கள் காலப்­போக்கில் அவற்றின் செயல்­பாட்டை இழப்­பதைக் குறிக்­கி­றது, இது முதுமை மற்றும் பல்­வேறு நோய்­க­ளுக்கு கார­ண­மா­கி­றது.


நோன்பு இருத்தல் இந்த செயல்­மு­றையை மெது­வாக்கி, செல்­களை புதுப்­பிக்கும் மற்றும் ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்கும் பல்­வேறு உட­லியல் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது.


அதா­வது நோன்பு இருக்கும் போது உடலில் ஓட்­டோ­பேஜி எனப்­படும் ஒரு முக்­கி­ய­மான கலச் செயல்­முறை ஏற்­ப­டு­கி­றது. ஓட்­டோ­பேஜி என்­பது உடலில் உள்ள பழைய, சேத­ம­டைந்த அல்­லது செய­லி­ழந்த புர­தங்கள் மற்றும் செல்­களை அகற்றி, புதிய மற்றும் ஆரோக்­கி­ய­மான செல்­களை உரு­வாக்கும் ஒரு செயல்­முறை ஆகும். இந்த செயல்­முறை செல்­களை புதுப்­பித்து, அவற்றின் செயல்­பாட்டை மேம்­ப­டுத்­து­கி­றது. இது கல வய­தாக்­கத்தை மெது­வாக்கி, முது­மையை தாம­தப்­ப­டுத்­து­கி­றது. (முதுமை என்­பது வயது மாத்­தி­ர­மல்ல என்­பதை நினைவில் கொள்­ளுங்கள்)


2016 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த (நோபல் பரிசு பெற்ற) யோஷி­னோரி ஓசுமி என்­பவர் ஓட்­டோ­பேஜி செயல்­மு­றையை கண்­டு­பி­டித்தார். இந்த ஆராய்ச்சி நோன்பு இருத்தல் ஓட்­டோ­பே­ஜியை ஊக்­கு­விக்­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யது.


அதே போன்று உடலில் ஏற்­படும் ஒக்­ஸி­டேட்டிவ் அழுத்­தத்தை குறைப்­ப­திலும் நோன்பு பெரும் பங்கு வகிக்­கி­றது. (Reducing Oxidative Stress). ஒக்­ஸி­டேட்டிவ் அழுத்தம் (Oxidative Stress) என்­பது உடலில் உள்ள மேல­திக வேதிப்­பொ­ருட்கள் (Free Radicals) மற்றும் ஆக்­ஸிஜன் மூலக்­கூ­று­களின் சம­நிலை குலை­வதால் ஏற்­படும் ஒரு நிலை ஆகும். இது செல்­க­ளுக்கு சேதம் விளை­வித்து, கலங்­களின் வய­தாக்­கத்தை துரி­தப்­ப­டுத்­து­கி­றது. நோன்பு இருத்தல் உடலில் உள்ள ஒக்­ஸி­டேட்டிவ் அழுத்­தத்தை குறைக்­கி­றது. இது செல்­களை பாது­காக்­கி­றது மற்றும் அவற்றின் ஆயுளை நீட்­டிக்­கி­றது.


2020 ஆம் ஆண்டில் நடத்­தப்­பட்ட ஒரு ஆராய்ச்­சியில், நோன்பு இருத்தல் உடலில் உள்ள அன்­டி­ஆக்­ஸிடன்ட் (நச்சு வேதிப் பொருட்­களை அழிப்­பவை) அளவை அதி­க­ரிக்­கி­றது என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இது செல்­களை பாது­காக்­கி­றது மற்றும் முது­மையை தாம­தப்­ப­டுத்­து­கி­றது.


நோன்பு நோற்­பது எமது நிற­மூர்த்­தங்­களில் கூட மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. அதா­வது எமது நிற­மூர்த்­தங்­களில் முனை­களில் டெலோ­மி­யர்கள் (Telomeres) எனப்­படும் மூடிகள் காணப்­ப­டு­கின்­றன, அவை செல்­களின் பிரிவை கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன. இவற்றை சீராக்கி அவற்றின் நீளத்தை பாது­காக்கும் பணி­யையும், உடலில் உள்ள DNA பழு­து­பார்ப்பு செயல்­மு­றையை ஊக்­கு­வித்து DNA சேதத்தை சரி­செய்­வ­தனால் புற்று நோய் போன்ற பல நோய்­களை இருந்தும் கலங்கள் வய­தா­வ­தி­லி­ருந்தும் பாது­காக்­கின்­றது.


இவ்­வா­றான மருத்­துவ பலன்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் நோன்பு நோற்கும் போது சில விட­யங்­களை கருத்திற் கொள்ள வேண்டும். மிகக் குறிப்­பாக எமது உண­வு­களை மிகச் சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். நோன்பு நோற்­கின்ற போது ஸஹர் நேரத்தில் அதி­க­மான காபோ­வை­த­ரேட்­டுக்கள் – மாச்­சத்து உண­வு­களை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது மிக வேக­மாக உடலில் இன்­சு­லினை சுரக்­கச்­செய்து மிக விரை­வா­கவே பசி உணர்வை தூண்­டி­விடும். மாறாக புரத உண­வுகள், பழங்கள், மரக்­கறி வகைகள் போன்­ற­வற்றை எடுத்துக் கொள்­ளுதல், பால் அருந்­துதல் என்­பன ஆரோக்­கி­ய­மான உண­வு­க­ளாக அமையும். ஸஹர் நேரத்தில் உண­வ­ருந்தி விட்டு தேநீர் அல்­லது கோப்பி அருந்­து­வது உங்­களின் சிறுநீர் சுரப்பை அதி­க­ரித்து மிக வேக­மாக தாகத்தை ஏற்­ப­டுத்தும். எனவே நோன்பு நோற்கும் போது தேயிலை அல்­லது கோப்பி என்­ப­வற்றைத் தவிர்த்து பால் அருந்­து­வது சிறந்­தது. நோன்பு திறக்­கின்ற போது பொது­வாக கஞ்சி அருந்­து­வது எமது வழக்­க­மாக இருக்­கின்­றது. இது மிக மிக ஆரோக்­கி­ய­மான ஒரு உண­வாகும்.


மிக நீண்ட நேர­மாக உண்­ணாமல், பரு­காமல் இருந்த உட­லுக்கு இந்த கஞ்சி போது­மான நீர்ச்­சத்து, ஊட்­டச்­சத்­துக்­களை வழங்­கு­வ­தோடு எமது உடலில் இருந்து இழக்­கப்­பட்ட கனி­யுப்­பு­க­ளையும் மீள் நிரப்­பு­வ­தற்கு உத­வு­கின்­றது. கஞ்சி மிக இல­குவில் சமிபா­ட­டை­யக்­கூ­டி­ய­தாக இருப்­பதால் நீண்ட நேர­மாக ஓய்வில் இருந்த குடல்­க­ளுக்கு இது மிரு­து­வா­ன­தாக இருக்கும். கன­மான உண­வு­களை உண்­ணு­வது ஆபத்­தா­ன­தாக அமையும். அதே­போன்று நோன்பு திறக்­கின்ற போது அதிக எண்ணெய் கொழுப்பு உள்ள உண­வு­களை எடுத்துக் கொள்ளக் கூடாது. குறிப்­பாக பொரித்த உண­வு­களை தவிர்ந்து கொள்­வது மிக மிக சிறந்­தது. அதே­போன்று சிலர் குளிர்பானம் அருந்­து­கின்ற பழக்­கத்தை உள்­ள­வர்­க­ளாக இருக்­கின்­றனர். நோன்பு திறக்­கின்ற போது சோடா வகை­யான பானங்­களை அருந்­து­வது மிக ஆபத்­தா­னது. மிக நீண்ட நேர­மாக நீர் பற்­றாக்­கு­றை­யி­லி­ருந்த சிறு­நீ­ர­கங்­க­ளுக்கு மிகச் செறி­வான இந்த சோடா பானங்­களை வழங்­கு­கின்ற போது சிறு­நீ­ர­கங்கள் பாதி­ப்படை­யக்கூ­டிய ஆபத்து இருக்­கின்­றது. காலப்­போக்கில் இது சிறு­நீ­ரக செய­லி­ழப்­பாக கூட மாறலாம். எனவே பானங்கள் அருந்­து­வ­தாயின் வீட்­டிலே தயா­ரித்த பழ ரசங்­களை அருந்­து­வது மிகவும் பொருத்­த­மா­னது. அதே­வேளை இரவு நேரத்தில் அதி­க­மாக நீர­ருந்த வேண்டும்.


நோன்பு என்­பது உணவு குறைப்பு முறை­யாகும். எனவே நோன்பு காலத்தில் இரவு நேரங்­களில் அதி­க­மாக சாப்­பா­டுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஸஹர் நேரத்தில் மிகக் குறை­வாக சாப்­பி­டு­ப­வர்கள் இரவு வேளை உண­வினை எடுத்துக் கொள்ள முடியும்.


ஸஹர் நேரத்தில் சாப்­பி­டு­ப­வர்கள் நோன்பு சிறந்­த­துக்கு பின்னர் இர­வு­ணவை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஸஹர் நேரத்­திலும் இப்தார் நேரத்­திலும் சாப்­பிட்­டு­விட்டு மீண்டும் இரவு நேரத்­திலும் நாங்கள் சாப்­பி­டு­வோ­மாயின் வழமை­யாக நாங்கள் சாப்­பி­டு­கின்ற அள­வை­விட அதி­க­மாக சாப்­பி­டு­கின்ற ஒரு நிலை ஏற்­படும். சரி­யான முறையில் நாங்கள் நோன்பு இருந்தால் நிச்­ச­ய­மாக எங்­க­ளு­டைய உடலின் எடையில் ஒரு குறிப்­பிட்ட அளவு குறைவை 30 நாட்­க­ளுக்குப் பின்னால் நீங்கள் கண்டு கொள்­ள­மு­டியும்.


கடு­மை­யான நோயா­ளி­க­ளுக்கு நோன்பு கட­மை­யில்லை. ஆனால் தொடர்ச்­சி­யாக சில நோய்­க­ளுக்கு மருந்­து­களை பாவிப்­ப­வ­ராக நீங்கள் இருந்து நோன்பு நோற்­கின்ற போது மருத்­துவ ஆலோ­ச­னையை பெற்­றுக்­கொள்ள வேண்டும். நீங்கள் மூன்று வேளை மருந்­து­களை பாவிக்­கின்ற ஒரு­வ­ராக இருந்தால் உங்களது வைத்தியரை நாடி அதனை இரண்டு வேளை மருந்துகளாக ரமலான் மாதத்திலே மாற்றிக்கொள்ள வேண்டும். அதேபோன்று சிறிய பிள்ளைகள் நோன்பு நோற்கின்ற போது அவர்களை கட்டாயமாக சகர் உணவை நன்றாக சாப்பிட வைத்து நோன்பு நோற்பதற்கு அனுமதிப்பதோடு அவர்களை வெயில் வெளியில் ஓடி திரிவதை குறைத்து வீட்டில் களைப்­ப­டை­யாத வேலைகள் அல்­லது விளை­யாட்­டுக்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்க முடியும். நோன்பு திறக்­கின்ற போது அவர்­க­ளுக்கு நீரா­கா­ரங்­களை வழங்கி இரவு நேரத்­திலும் அவர்­க­ளுக்கு சிறந்த ஊட்­டச்­சத்­துக்­களை வழங்க வேண்டும்.


எனவே நோன்பு பிடித்தல் என்­பது தக்­வாவை – இறை­யச்­சத்தை அதி­க­ரிக்க கூடிய ஒரு இபா­தத்­தாக இஸ்­லாத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் அது பல்­வேறு வகை­யான மருத்­துவ பலன்­களை எங்­க­ளுக்கு தரு­கின்­றது. இந்த ஆன்­மீக ரீதி­யான மற்றும் உடல் ரீதி­யான அனைத்து வகை­யான நன்­மை­க­ளையும் முழு­மை­யாக நாங்கள் பெற்றுக் கொள்­வ­தற்கு எதிர்­வரும் ரமழானை முழுமையாக திட்டமிட்டு பயன்படுத்த தயாராகுவோம். 


– Vidivelli -

No comments

Powered by Blogger.