Header Ads



முஸ்லிம் MP யை தொடர்புபடுத்தி 2 ஆவது, ஈஸ்டர் தாக்­குதல் என பிரச்சாரம் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


(எப்.அய்னா)


எஸ்.எல். இலக்ஷன் யூ ரியூப் மற்றும் முகப்­புத்­தகம், டிக்டொக் உள்­ளிட்ட சமூக வலை­த்தள பக்­கங்­களில் ‘2 ஆவது ஈஸ்டர் தாக்­குதல் குரு­ணா­கலில்? திசை­காடி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பின்­ன­ணியில்’ எனும் தலைப்பில் வெளி­யி­டப்­பட்ட காணொ­ளியை உட­ன­டி­யாக அனைத்து தளங்­களில் இருந்தும் அகற்­று­மாறு கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் கமகே உத்­த­ர­விட்­டுள்ளார்.


சட்­டத்­த­ரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்மட் கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் சட்­டத்­த­ரணி சந்­தீப கம­எத்தி ஊடாக தாக்கல் செய்­துள்ள ஒரு பில்­லியன் ரூபா நட்ட ஈடு கோரும் மான நட்ட ஈட்டு வழக்­கினை ஆராய்ந்தே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளது.


குரு­ணாகல் அஸ்­வெத்­தும ஜும்ஆ பள்­ளி­வா­சலில் செய­லா­ள­ராக சட்­டத்­த­ரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்மட் செயற்­ப­டு­வ­தா­கவும், அவர் அப்­பள்­ளி­வா­சலில் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான முஸ்லிம் கலா­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை ஏற்­ப­டுத்தி அடிப்­படை வாதத்தை வளர்ப்­ப­தா­கவும், அவ­ரது பின்­ன­ணியில் தேசிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஸ்லம் இருப்­ப­தா­கவும் கூறி, எஸ்.எல். இலக்ஷன் எனும் யூ ரியூப் தளத்தில் காணொளி ஒன்று வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அதில் மேலும் பல விட­யங்கள் கூறப்­பட்­டி­ருந்த நிலையில், சட்­டத்­த­ரணி சட்­டத்­த­ரணி மொஹம்மட் சுல்தான் ஷமீல் மொஹம்­மட்டின் நற் பெய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக கூறி, கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டது.


குரு­ணாகல் பகு­தியை சேர்ந்த ஷஷிக திசா­நா­யக்க, எஸ்­வெத்­தும பகு­தியை சேர்ந்த மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் நசார், மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் ரிஸ்வான், மல்­ல­வ­பிட்­டியை சேர்ந்த மொஹம்மட் ஹனீபா மொஹம்மட் ராசிக் ஆகி­யோ­ருக்கு எதி­ராக இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.


இந்த நிலையில் இவ்­வ­ழக்­கா­னது கடந்த திங்­க­ளன்று கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் விதான‌ முன்­னி­லையில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போது சட்­டத்­த­ர­ணி­க­ளான‌ மன­துங்க ஆரச்சி, ரிஸ்வான் உவை­ஸ் உடன் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், மனு­தாரர் சார்பில் விட­யங்­களை நீதி­ப­திக்கு தெளி­வு­ப­டுத்­தினார்.


அந்த வாதங்­களை ஏற்­றுக்­கொண்ட நீதி­பதி சந்துன் விதான, முதல் சந்­தர்ப்­பத்­தி­லேயே வழங்க முடி­யு­மான தடை உத்­த­ரவை பிறப்­பித்து, குறித்த காணொ­ளியை யூ ரியூப், பேஸ் புக், மற்றும் டிக் டொக் தளங்­களில் இருந்து அகற்ற பிர­தி­வா­தி­க­ளுக்கு உத்­த­ர­விட்டார். இதனை நீதி­மன்ற பதி­வாளர் ஊடாக அறி­விக்­கவும் நட­வ­டிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.


அத்துடன் குறித்த வழக்கை பரீசீலிக்க தீர்மானித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். – Vidivelli

No comments

Powered by Blogger.