Header Ads



NPP குறித்து வெளியாகியுள்ள, சில சங்கடமான தகவல்கள்


- Siva Ramasamy -

(தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்) 


இரண்டு மனம் வேண்டும்.. இறைவனிடம்…


தேசிய மக்கள் சக்தியினருக்கு இரண்டு மனங்கள் தேவைப்படுகின்றன.. 


* பார் பெர்மிட்டை வெளியே போடுவோம் என்கிறது ஒரு க்ரூப்.. 


வேண்டாம் எலக்ஷனில் எதிர்பார்க்கும் சீட்கள் கிடைக்காவிடின் வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்று அதனை நிறுத்திவைக்க கேட்கிறது இன்னொரு க்ரூப்..


* எலக்சனுக்கு முன்னர் கொஞ்சப் பேரை உள்ளே போடுவோம் என்கிறது ஒரு க்ரூப்..  


வேண்டாம் வேண்டாம் அதனால் அவர்களுக்கு மக்களின் அனுதாபம் வந்துவிடும் என்கிறது இன்னொரு க்ரூப்..


* கட்சிக்காக பாடுபட்ட சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை பிரதமர் ஆக்குவோம் என்கிறது ஒரு க்ரூப்..


இல்லை.. பெண்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இப்போதுள்ளவரே தொடரட்டும் என்று நிற்கிறது ஒரு க்ரூப்..


* இந்தியாவுடன் இணங்கிப்போவோம் என்கிறது ஒரு க்ரூப்..


இல்லை. சீனாவுடன் சேர்ந்தே செல்வோம் என்கிறது இன்னொரு க்ரூப்..


லிஸ்ட் நீள்கிறது..


கேட்பார் பேச்சை கேட்டால் , அனுரகுமாரவும் குறுகிய காலத்தில் மற்றுமொரு கோட்டாவாகிவிடுவார்..


No comments

Powered by Blogger.