Header Ads



ஸ்ரீரங்கா தொடர்பில் விசாரணை ஆரம்பம்


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான ஜே ஸ்ரீரங்கா தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்வது தொடர்பில் கொழும்பு குற்ற விசாரணை பிரிவு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படும் வகையில் கொழும்பு நகரில் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இந்த விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் கொழும்பு பிரதான நீதவானிடம் தகவல் வழங்கியுள்ளனர்.


சுவரொட்டிகளை ஒட்டி நீதிபதியை இழிவுபடுத்திய சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா செயல்பட்டு இருந்தாரா என நீதிமன்றம் பொலிஸ் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தது.


இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கொழும்பு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.