Header Ads



தமது வெற்றி வாய்ப்பு குறித்து, முன்னாள் அமைச்சரின் கருத்து



பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக  பலமான அணியுடன் இணைந்து செயற்படுவதாக  புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர்  ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.


காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறிய அவர்,  கடந்த தேர்தலில் புதிய வாக்கு தளம் கிடைத்தது என்றார்.


அத்துடன், குறித்த வாக்காளர் தளத்தை பலப்படுத்த பாடுபடுவதுடன், ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற குழுவாக, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.


காலி மாவட்டம் பொதுத் தேர்தலுக்கு பலமான அணியை களமிறக்கியுள்ளதுடன்,  தொழில் வல்லுநர்கள் மற்றும் மக்கள் நட்புடன் கூடிய குழுவொன்று தேர்தலில் போட்டியிடுவதாகம் அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.