Header Ads



இன்றுமுதல் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கலாம்


எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரை 58 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல மற்றும் கொழும்பு தேர்தல் மாவட்டங்களிலிருந்து அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.


அத்துடன், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் வெள்ளிக்கிழமை  (04) ஆரம்பமாகவுள்ளன.


அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.