Header Ads



நகரங்களிலுள்ள அனைத்து வீடுகளிலும் வீட்டுத்தோட்ட செய்கை


நகரங்களிலுள்ள அனைத்து வீட்டு அலகுகளிலும் வீட்டுத்தோட்ட செய்கையை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


குடும்பமொன்றுக்கு நாளாந்தம் தேவையான மரக்கறிகளை வீட்டுத்தோட்டங்கள் மூலம் உற்பத்தி செய்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன் முதற்கட்டமாக பிரதான நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 10,000 வீடுகளில் வீட்டுத்தோட்ட செய்கையை மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.