Header Ads



பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு - பொலிசார் வெளியிட்டுள்ள காரணம்


களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தாக காவல்துறையினர் தெரிவத்துள்ளனர்.


ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று (23) கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனை வெளிப்படுத்தியுள்ளார்.


நேற்றிரவு (22) மாணவர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுபான விருந்து நடைபெற்றதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


குடிபோதையில் இருந்த மாணவனை சி.டபிள்யூ.கன்னங்கரா விடுதியின் நான்காவது மாடியில் உள்ள அவரது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டு மற்ற நண்பர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.


இதன் படி, குறித்த மாணவன் அதிகமாக மது அருந்தியதால் அறையின் ஜன்னல் பகுதியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


சம்பவம் இடம்பெற்ற அறையை நீதவான் பரிசோதிக்க உள்ளதாகவும், அரசாங்க பரிசோதகர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் உரிய இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.


களனிப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் கணக்கியல் துறையின் நான்காம் வருட மாணவர் பிரின்ஸ் ராஜு பண்டார என்றழைக்கப்படும் சந்தா, விடுதியின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.


பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, ​​மேம்பட்ட பொருளாதாரம் மற்றும் வணிகப் படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி தனது எதிர்கால சந்ததியை ஆசிரியராக ஒளிரச்செய்ய முயன்ற ஒரு மாணவனாக பிரின்ஸ் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.