Header Ads



அநுரகுமார அரசாங்கத்தை விட, கோட்டாபய அரசாங்கம் மேல் - ரிசாட் மஹ்ரூப்


 தற்போது ஆட்சிபீடத்தில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தொடர்பில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் ரிசாட் மஹ்ரூப் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.



கடந்த 2019ஆம் ஆண்டு அமையப்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின், கோட்டாபயவின் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதுவிதமான நன்மையும் இல்லை என்பது எனக்குத் தெரியும்.


ஆனால், தற்போது ஆட்சிபீடமேறியிருக்கும் அநுர தலைமையிலான அரசாங்கத்தை விட  கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அந்த அரசாங்கம் மேல் என்ற காரணத்தினால் தான் பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களைக் கொன்று குவித்த ஒரு வரலாறு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.