Header Ads



இரண்டு மனுக்களின் பிரதிவாதியாக ரணில்


2022 ஆம் ஆண்டு சோசலிச இளைஞர் சங்கம் நடத்திய போராட்டத்தின் மீது பொலிசார் தாக்குதல் நடத்தி கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


சோசலிச இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று (22) அழைக்கப்பட்ட போதே மனுதாரரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.