Header Ads



தேர்தலில் போட்டியிட, வாய்ப்பு வழங்க மறுத்தனர்


தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் பொதுத் தேர்தலில் தமது கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது என தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.


இதன் காரணமாகவே இம்முறை பொதுத்தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வருட பொதுத் தேர்தலில் திசைகாட்டி மற்றும் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.