Header Ads



வெளிநாடுகளில் உள்ள பணத்தை, எப்போது கொண்டு வருவீர்கள்..? திருடர்களை எப்போது பிடிப்பீர்கள்..??


கடந்த காலங்களில் ஊழல் மற்றும் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல்சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.


பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


கடந்த ஆட்சி கால திருடர்களைப் பிடிப்பதற்கு தேவையான அனைத்துத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


திருடர்களைப் பிடிப்பது குற்றப் புலனாய்வுப் பிரிவினரினதும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினதும் செயற்பாடாகும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மேலும், வெளிநாடுகளின் வங்கிகளில் இந்த நாட்டின் பணம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை எப்போது நாட்டுக்குத் திருப்பிக் கொண்டுவரப் போகிறீர்கள் என எம்மிடம் கேள்வி எழுப்பப்படுகின்றது. 


இந்த விவகாரங்களைப் பற்றி பேசுவது திருடர்களுக்குத் தேவையான தகவலை அளிப்பது போல் இருக்கும். அது எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.