Header Ads



மலேசியாவில் இருந்து கொண்டுவந்த சாரிகளுக்குள் போதைப் பொருள்


- இஸ்மதுல் றஹுமான் -


       25 மில்லியன் ரூபா பெறுமதியான விஸ போதைப்பொருளை கடத்திவந்த விமானப் பயணியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.


   மலேசியாவிலிருந்து யூ.எல். 315 இலக்க விமானத்தில் வந்திரங்கிய பயணியின் பொதிகளை இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் பரிசீலித்த போது  அவரின் பேக்கில் அவர் கொண்டுவந்த சாரிகளுக்கு உள்ளே சூசகமாக மறைத்து வைத்திருந்த ஐஸ் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமாகிய சீவலி அருக்கொட தெரிவித்தார்.


     இந்திய நாட்டவரான அவரிடமிருந்து ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் கைபற்றப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமானம் சுமார் 25 மில்லியன் ரூபாவாகும்.


   கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைபற்றப்பட்ட போதைப் பொருளையும் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்ததாக சுங்க பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.