Header Ads



சச்சரவுகளில் ஒரு தரப்பாக இருக்க, இடம் கொடுக்காமல் இருப்பதும் அழகுதான்...


நீங்கள் சண்டைகளை விரும்பாமல் இருப்பது அழகுதான்.


நீங்கள் சச்சரவுகளில் ஒரு தரப்பாக இருக்க, இடம் கொடுக்காமல் இருப்பதும் அழகுதான். 


அதற்காக நீங்கள் சமாதானப் புறாக்கள் என்று அர்த்தமாகாது. 


உங்கள் மனம் கலக்கம் அடையாமல் பார்த்துக்கொள்வது உங்களுக்கு அழகல்லவா...


வெறுப்புக்களால் நாம் ரசித்து வாழும் வாழ்வின் இனிமை பொளிவிழந்து போகுமல்லவா...


நம் பாசமும், நாம் பாசம் கொண்டவர்களும் நமக்கு முக்கியம் இல்லையா...


அடிப்பதிலும் திருப்பி அடிப்பதிலும் காலம் கழிக்க காலம் ஒன்றும் நித்தம் நிலைத்து நிற்கக் கூடிய ஒன்றல்ல. 


மோதும் எதிரி யார் ? சந்திக்கும் போர்க்களம் எது? என ஒரு புத்திசாலிதான் தீர்மானிப்பான். 


பகைவனுடன் மல்லுக்கட்டுவதை விட உன் சுயமரியாதை உனக்கு முக்கியம் இல்லையா....


உன் உள்ளத்தில் உலகத்தையே அணைக்க இடம் இருப்பது எவ்வளவு அழகானது.


Imran Farook


No comments

Powered by Blogger.