Header Ads



விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல், இந்திய விமானம் விசேட சோதனை


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமானமொன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



மும்பையிலிருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியாவின் விஸ்தாரா விமானச் சேவைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விமானத்திலுள்ள பயணிகள் மற்றும் விமான பணிக்குழாமினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமானத்தினுள் சோதனை நடத்தப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.