Header Ads



அநுரகுமாரவின் உரையை, மஹிந்த கேட்கவில்லையா..?


அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கேள்வி - தேர்தல் ஏற்பாடுகள் எப்படி உள்ளன?


" தயாராக உள்ளோம்."


கேள்வி - பொதுஜன பெரமுனவின் வெற்றி எவ்வாறு உள்ளது?


"வெற்றி மிக எளிதாக உள்ளது."


கேள்வி - நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா? தற்காலிக விலகலா?


‘‘தற்காலிக... அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை.


கேள்வி - ஜனாதிபதியின் உரையை நீங்கள் செவிமடுத்தீர்களா? முதன்முறையாக இக்குழுவினர் ஓய்வு பெறுகின்றனர் என்றார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?


"இல்லை, நான் கேட்கவில்லை.. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. "


ராஜபக்ஷக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சமூகக் கருத்து உருவாகியுள்ளது தானே?


"ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலின் கேட்கிறார். 113 இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்."

No comments

Powered by Blogger.