Header Ads



இது விற்பனைக்கு அல்ல - அதிரடியாக அறிவித்த ஹேரத்


நுவரெலியாவிலுள்ள காலனித்துவ கால தபால் நிலையத்தை ஹோட்டல் திட்டத்திற்காக வழங்குவதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கட்டிடம் மற்றும் அதன் நிலப்பரப்பு அஞ்சல் துறைக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்றார்.


“முந்தைய அரசாங்கம் நுவரெலியா தபால் நிலைய வளாகத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தது. அது புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்குள் உள்ளடங்காது என்பதை பொறுப்புணர்வுடன் கூறுவோம்.


சிறப்புமிக்க இக்கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் தபால் திணைக்களத்திற்கு மட்டுமே ஒதுக்குவோம். இது எவருக்கும் வழங்கப்பட மாட்டாது, முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் நாங்கள் நிறுத்தி வைப்போம் என்று அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.