Header Ads



திருமணமான புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட சிக்கல்


இலங்கையின் பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணமான புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.


சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக நீர்நிலைகள் பெருக்கெடுத்து வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் இளைஞன் ஒருவர் திருமணம் முடித்து, தனது மனைவியை காரில் அழைத்து செல்வதற்கு பதிலாக படகில் அழைத்து செல்ல நேரிட்டுள்ளது.


களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புளத்சிங்கள பகுதியின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.


இந்நிலையில் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டிற்கு சென்ற விதம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

No comments

Powered by Blogger.