Header Ads



ஹக்கீமுடன் இணைந்து பயணிக்க, றிசாத்தின் ஒரு நிபந்தனை


(எப்.அய்னா)


அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு ஆத­ர­வ­ளித்து சமூ­கத்தை காட்டிக் கொடுத்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இம்­முறை தேர்­தலில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­காது அவர்­களை கட்­சியில் இருந்து நீக்­கி­விட்டு வந்தால், மு.கா. மற்றும் அதன் தலைவர் ஹக்கீ­முடன் ஒன்­றி­ணைந்து பய­ணிக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் அறி­வித்­துள்ளார்.


முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்குள் ஒற்­றுமை இல்லை எனவும் அவர்கள் பிரிந்து இருப்­ப­தா­கவும் பல்­வேறு சமூக ஆர்­வ­லர்கள் கவலை கொண்­டுள்ள நிலையில், அது தொடர்பில் வின­விய போதே ரிஷாத் பதி­யுதீன் இதனை தெரி­வித்தார்.


‘மு.கா. தலைவர் ஹகீ­முடன் சேர்ந்து பய­ணிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் அவர் 20 ஆம் திருத்­தத்­துக்கு கையு­யர்த்­தி­ய­வர்­களை நீக்கி விட்டு வர­வேண்டும். அவ்­வாறு வந்தால் அவர்­க­ளோடு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சேர்ந்து பயணிக்கும். வேறு எந்த நிபந்தனையும் இல்லை.’ என தெரிவித்தார்.– Vidivelli

No comments

Powered by Blogger.