Header Ads



கம்பஹாவில் திலித் போட்டி


சர்வஜன அதிகாரக் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.  


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோரும் சர்வஜன அதிகார  கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.தாயக மக்கள் கட்சியின் தலைமையகத்தில் இந்த  நிகழ்வு நடைபெற்றுள்ளது.


பல்வேறு கட்சிகளின்  தலைவர்களால் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் முத்திரையை அகற்றுவதற்கு, தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என தாயக மக்கள் கட்சியின்  தலைவர் திலித் ஜயவீர இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.