Header Ads



பாறுக் ஷிஹான் புலனாய்வு விருதினை பெற்றார்


இலங்கையில்  கலை, இலக்கியம், ஊடகத்துறை,சமூகப்பணி என்பவற்றில் சாதனை படைத்த   பல்துறை  ஆளுமைகளைக்  கௌரவிக்கும் Sky Tamil ஊடக அமைப்பின்    விருதுகள் வழங்கி கெளரவிக்கும்  விழா மிகப் ஏற்பாடு செய்யப்பட்டு   கடந்த சனிக்கிழமை(19) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்ப பீட அரங்கில் ஸ்கை தமிழ், துணிந்தெழு பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெ.எம். பாஷித்  தலைமையில் இடம்பெற்றது.


விருது விழாவில் கடந்த 18 வருடங்களுக்கு மேலாக  ஊடகத்துறையில் செயற்பட்டு வரும்  பாறுக் ஷிஹான் புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான  சிறந்த  புலனாய்வு செய்தியாளர் (investigation journalist ) விருதினை பெற்றுக் கொண்டார்.


இந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகரும், தொழிலதிபருமான புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத், கலை கலாச்சார பீடாதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலர் உட்பட நிறைய பிரமுகர்கள் பலரும் கௌரவ, விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.