Header Ads



தந்தை கொண்டுவந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு திரும்பிய போது விபரீதம்


திருகோணமலை - சீனக்குடா பகுதியில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்து நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு தொடருந்து பாதையை கடக்கும் போதே இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.


கல்ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் இவர்கள் இருவரும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.