Header Ads



ஜோர்தானில் இலங்கைப் பெண் உயிரிழப்பு


ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த போது சுகவீனமடைந்து உயிரிழந்த மகளின் சடலத்தை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொஸ்கொட வதுரவெல பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர் உரிய அதிகாரிகளிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த 25 வயதான நதிஷானி திஸாநாயக்கவின் சடலத்தையே ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியன்று ஜோர்டானில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் நதிஷானி வேலைக்குச் சென்றதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டினை முழுமையாக கட்டி முடிப்பதற்காவும் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.