Header Ads



அன்னை ஸைனப் (ரழி) ஹுஸைன் (ரழி) அவர்களை பிரியாவிடை அனுப்பும் போது...


படத்தில் நீங்கள் காண்பதுதான் நம் இதயத்தை பிணைக்கும் தசைநார் வடங்கள் ஆகும். 


'அதிர்ச்சியால் மரணித்தவர்கள், கவலை தாங்காமல் மரணித்தார்கள், விரக்தியால் மரணித்தார்கள்.' என்றெல்லாம் நீங்கள்  கேள்விப்பட்டிருப்பீர்கள். 


அதீத கவலையால், கோபத்தால், அல்லது  விரக்தியால் மனம் உடைந்து போகும் போது,  இந்த தசைநார்கள் கிழிந்து போகும். அதனால் இரத்தம் உறைந்து போய் மாரடைப்பு சம்பவிக்கும்.


அன்னை ஸைனப் (ரழி) அவர்கள் தங்கள் உடன் பிறந்த சகோதரர் ஹுஸைன் (ரழி) அவர்களை பிரியாவிடை அனுப்பும் போது பின்வருமாறு சொன்னார்கள்:


நீ என் இதய தசைநார் வடங்களை அறுத்துவிட்டுச் செல்கிறாயே" என்பதாக ஏங்கினார்கள். 


நீங்கள் ஒருவரின் மனதை உடைக்க நினைப்பதானது அவரை சாகடிக்க நினைப்பதாகும், என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!


- Imran Farook -


No comments

Powered by Blogger.