Header Ads



10 வெளிநாட்டவர்களுக்கு ஆயுட்கால சிறை தண்டனை


- இஸ்மதுல் றஹுமான் -


     ஹெரோய்ன் போதேப் பொருளை கடத்தி வந்த 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறை தண்டனை வழங்கியுள்ளது.


   ஈரான் நாட்டைச் சேர்ந்த 9 நபர்களும் ஒரு பாகிஸ்தான் நாட்டவருக்குமே இச் சிறை தண்டனை நேற்று 23ம் திகதி வழங்கப்பட்டது.


    146 கிலோ கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் 2016 ம் ஆண்டு இந்த பத்து வெளி நாட்டவர்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


    கட்டுநாயக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட இல் வழக்கு நீண்ட கால விசாரணையின் பின்னர் குற்றவாளியாகக் காணப்பட்ட பத்துப் பேருக்கும் ஆயுட்கால தண்டனை வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.