Header Ads



பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்வான் விபத்தில் வபாத், அமைப்பாளர் படுகாயம்


அனுராதபுரம்-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி அலபத்தாவ சந்தியில் இன்று (22) அதிகாலை  கார் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த பிரதேச சபை உறுப்பினரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பிரதேச சபை உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை- பத்தாவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான  கே.எம்.றிஸ்வான் (42 வயது) ஆவார்.


உயிரிழந்தவரின் ஜனாசா ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் தேர்தல் நடவடிக்கை பணிகளுக்குச் சென்று வீடு திரும்பும் நிலையிலயே இவ்விபத்து இடம்பெற்றது. 


விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.