Header Ads



பொதுஜன பெரமுன NPP க்கு விடுத்துள்ள சவால் - ஊடக நாடகத்தினையே நடத்துவதாகவும் குற்றச்சாட்டு


ராஜபக்சர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை நடைமுறைப்படுத்தி அதன் உண்மைத் தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.


பெருமளவான டொலர்களை கொள்ளையடித்து உகண்டாவுக்கு ராஜபக்சர்கள் கொண்டு சென்றார்கள் என தெரிவித்த அநுர குமார தரப்பினர் தற்போது அது தொடர்பான உண்மைத் தன்மையினை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 



கொழும்பில் இன்றைய தினம் -30- இடம்பற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


இந்நாட்டில் அரசியல்வாதிகள் திருடர்கள், இந்நாட்டில் ஊழல்கள் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன, இதனால் தான் இந்நாடு முன்னோக்கிச் செல்லாது  பின்னடைவையே சந்திக்கின்றது என்றெல்லாம் மக்கள் விடுதலை முன்னணியானது தொடர்ந்தும் மக்களுக்கு தெரிவித்து வந்தனர்.


ஆனால் கடந்த காலங்களில் ஊடக சந்திப்புக்கள் நடத்தி நாடகமாடியோர் மீண்டும் அதே பணியினை செய்கின்றனர். நாம் கூறுவது என்னவென்றால், அரச தலைமையும் கிடைத்து, அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு அனைத்து வகையான அதிகாரங்களும் கிடைத்தும் மீண்டும் ஊடக நாடகத்தினையே நடத்துகின்றனர்.


ஏதும் ஒரு இடத்தில் திருட்டு இடம்பெற்றிருந்தால், ஊடக நாடகங்களை முன்னெடுக்காது, தயவு செய்து குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்து பொலிஸ் விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.



ராஜபக்சர்கள் திருடர்கள் என கடந்த காலங்களில் கூறியிருந்தீர்கள். 18பில்லியன் டொலர்களை உகண்டாவுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றதாக தெரிவித்தீர்கள். உடனடியாக இது குறித்து சாட்சிகளை தேடி உடனடியாக விசாரணை குழுவொன்றினை நியமித்து இவற்றை கண்டுபிடியுங்கள்.


ஏனெனில், இந்தப் பணத்தினை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக நீங்கள் தான் கூறியிருந்தீர்கள். இதனை கண்டுபிடிக்காது விட்டால் இதன் பின்னால் மக்கள் விடுதலை முன்னணிதான் இருக்கும் என மக்கள் நினைப்பார்கள்.


நாடாளுமன்ற தேர்தலுக்கும் பழைய கதையினையே கூறி ஊடக நாடகத்தினை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அது நாட்டுக்கு செய்யும் பாரிய அநீதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.


1 comment:

  1. ராஜபக்‌ஷாக்களின் சட்டத்தரணி, பாதைகள், முடுக்குகள்,சமூகத் தொடர்பாடல் தளங்களில் எல்லாம் ராஜபக்‌ஷாக்களுக்கு வக்காளத்து வாங்கிவருகின்றனர். இந்த அரசாங்கம் ராஜபக்‌ஷாக்கள் நாட்டின் பொதுச் சொத்துக்களை களவாடி உகண்டாவிலும் மற்றும் பல நாடுகளிலும் மூலதனம் செய்துள்ளதாக தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் கூறுவது பொய்யாக இருந்தால் உரிய இடத்துக்குச் சென்று நீதி தேடலாமே. ஏனெனில் நீங்கள் ராஜபக்‌ஷாக்களின் சட்டத்து அரணிதானே. ஏன் உங்களுக்கு நீதிமன்றம் செல்ல முடியாது. இலங்கையின் உயர் நீதிமன்றம், ராஜபக்ஸாக்கள் இந்த நாட்டின் பொருளாரத்தைக் குழிதோண்டிப்புதைத்து அவர்கள் நாட்டின் சொத்துக்களை வைத்து கோடிஸ்வரர்களாக மாறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கூறினால் அதற்கும் எதிராக ராஜபக்‌ஷா வக்காளத்தாளர்களாகிய நீங்கள் நீதிமன்றத்தை எதிர்த்து வாதிடலாமே. இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு வக்காளத்து வண்டவாளங்களான நீங்களே கூறுவது போல அரசாங்கம் செய்யும் அதே செயலைத்தான் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.எனவே சற்று ஒரிண்டு மாதங்கள் பொறுத்தால் ஜம்பரை அடித்துக் கொண்டு உங்களுக்கும் ராஜபக்‌ஷாக்களுடன் சேர்ந்து கொண்டே கம்பி எண்ணலாம். சற்று பொருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.