Header Ads



ஒரு கொள்கையில்லாத கட்சி JVP - அலி சப்ரி


திருக்கோவில் பிரதேசத்தில் இன்று (11) இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டவை


"இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு பெரும் இக்கட்டான நிலைமையில் இருந்தது. அப்போது ஐஎம்எப் நாட்டில் அனைவரையும் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு வலியுறுத்தியது. ஆனால் எதிர்கட்சியினர் அதற்கு முன்வரவில்லை. எதிர்கட்சித் தலைவர் சஜித்துக்கு பிரதமர் பதவியை வழங்கவும் தயாராக இருந்தோம். அப்போதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 


அன்று மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று உள்ளனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல வைத்தியரிடம் சென்று நீங்கள் சிகிச்சைக்கு சென்று, அதனால் நல்ல பலன் கிட்டும்போது, வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். 


சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். சில கட்சிகள் தெற்கின் கட்சிகள் செல்லும் திசைக்கு எதிர்திசையில் பயணிக்க வேண்டும் என்பதையே கொள்கையாக கொண்டுள்ளனர். சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்த பின்பும் அவருக்கு ஆதரவளிப்பதற்கு என்ன தடையிருக்கிறது. 


எனவே, மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதால் நாட்டிலிருக்கும் வலுவான தலைவரே நாட்டை மீட்க வேண்டும். சஜித் கூறுவதை போல வௌிநாட்டு செல்வந்தர்களின் உதவிகளை மட்டும் நாம் நம்பியிருக்க முடியாது. ஜே.வீ.பி ஒரு கொள்கையில்லாத கட்சியாக செயற்படுகிறது. எனவே நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்ட அனுபவம் மிக்க தலைவருக்கு நாம் இடமளித்தால் அடுத்த ஐந்து வருடங்களும் செழிப்பான நாடு எமக்கு கிடைக்கும்." என்றார்.  

1 comment:

  1. அன்று மக்கள் பட்ட கஷ்டங்கள் இன்று உள்ளனவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல வைத்தியரிடம் சென்று நீங்கள் சிகிச்சைக்கு சென்று, அதனால் நல்ல பலன் கிட்டும்போது, வைத்தியரை மாற்றினால் என்ன நடக்கும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த கருத்தைச் சொன்ன இந்த நபர், ஏற்கனவே, இனி 30 வருடங்கள் ஆட்சி செய்யப் ​போகும் கோதாவுக்கு கிழக்கு முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டால் ' அம்மானைக்கு கிடைக்கும்' எனக்கூறி பொதுமக்களைப் பயமுறுத்தினார். இன்றி ஐஎம்எப்பின் கடன் பணத்தைப் பெற்று பெற்ற கடனை 2028 ஆண்டு கண்டிப்பாக திருப்பி கொடுக்கும்கடன் பற்றி எந்த திட்டமும் இன்றி இன்னமும் குறிப்பாக முஸ்லிம்களையும் பொதுமக்களையும் ஏமாற்றும் இந்த நபருக்கு இந்த நாட்டுமுஸ்லிம்களும் பொதுவாக அனைவரும் தேர்தலில் நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.