Header Ads



அநுரகுமார சண்டித்தனமான அரசியல் செய்யக்கூடாது


தாயக மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது.


இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தாயக மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்,


அனுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில், தென்னிலங்கை ஒரு மாற்றத்திற்காக தயாராகி வருவதாகவும் தென்னிலங்கை மக்கள் தனக்கு வாக்களிக்க தயாராக இருப்பதாகவும் அது நிச்சயமான வெற்றியாகவும் இந்த வெற்றியில் தமிழ் மக்கள் கட்டாயம் பங்காளிகளாக இருக்க வேண்டும் எனவும் அதற்கு எதிரானவர்களாக தமிழர்கள் முத்திரை குத்த வாய்ப்புள்ளது ஆகவே நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்து இருக்கிறார்.


அவர் கூறிய கருத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம், ஒரு அரசியல் முதிர்ச்சியடைந்த ஜனாதிபதி வேட்பாளர் ஏனைய சக மக்களை அரவணைக்கும் தொனியில் பேசக்கூடியவரின் உண்மையான கருத்து இது தான், அவரின் மனதில் இருந்த வெறுப்பு வௌியே வந்த தருணம்.


தங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற சுதந்திரமும் உரிமையும் மக்களிடம் உள்ளது. அந்த உரிமைகளில் அனுர குமார திசாநாயக்க கை வைத்துள்ளார் என எண்ணுகின்றோம். இந்த மாதிரியான சண்டித்தனமான அரசியல் இங்கு வந்து செய்ய வேண்டாம் தேசிய மக்கள் சக்திக்கு நாங்கள் தெரிவித்து கொள்கிறோம் பயந்து அரசியல் செய்த காலம் எல்லாம் முடிந்து விட்டது என தாயக மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.