Header Ads



தேர்தல் என்பதால் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை - உலகச் சந்தையில் விலை அதிகரிப்பு


உலக சந்தையில்  எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் லிட்றோ விலை   அதிகரிக்கப்படாது என லிட்றோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது, ஆனால், மக்கள் நட்பு நிறுவனம் என்ற வகையில், உள்நாட்டில் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


உலகச் சந்தையில் விலை குறைவாக கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு வரவிருக்கிறது, எனவே தற்போது விலை திருத்தம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறினார்.


No comments

Powered by Blogger.