Header Ads



"இம்முறையும் ஜே.வி.பி. அவ்வாறான நிலைக்கே முகம்கொடுக்கப் போகிறது"


மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில்  பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார உரையாற்றும் போது குறிப்பிட்ட கருத்துக்கள்


"இலங்கையை மீட்டமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய மருந்துகள் கசப்பாக இருந்தன. ஆனால் அதனால் நாட்டை மீட்டெடுக்க முடிந்தது. மக்கள் கஷ்டப்படும்போது மக்களைக் காக்க வராத தலைவர்களுக்கு இன்று எங்கிருந்து தேர்தலுக்குப் பணம் வந்தது?


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இதேபோல் ஜே.வி.பியின் பெயர் பெருமளவில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர், அனுரகுமாரவுக்கு 3 சதவீத வாக்குகள் மாத்திரமே கிடைத்திருந்தது. இம்முறையும் ஜே.வி.பி அவ்வாறான நிலைக்கே முகம்கொடுக்கப் போகிறது" என்றார்.

No comments

Powered by Blogger.