Header Ads



முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து கதைப்பதற்கு ரணிலுக்கும் அநுரவிற்கும் முதுகெலும்பு இருக்கவில்லை


 கொரோனா தொற்று பரவிய காலத்தில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போதும், முஸ்லிம் மக்களுக்காக அவர்களுடைய கலாச்சார, மத உரிமை என்பனவற்றுக்காக ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள்  முன்நின்றது. கோட்டாபயவின் தீர்மானத்திற்கு அச்சமடைந்த ரணிலும் அநுரவும் பயந்து ஒளிந்து கொண்டார்கள். ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் அதற்கு எதிராக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பியது. தேசிய தலைவர்கள் என்று கூறிக் கொள்கின்ற ரணிலுக்கும் அநுரவிற்கும் அன்று இது குறித்து கதைப்பதற்கு முதுகெலும்பு இருக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 62 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 15 ஆம் திகதி கிண்ணியாவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.


அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்ட ஒரே தரப்பு ஐக்கிய மக்கள் கூட்டணியாகும். சிங்கள, முஸ்லிம், மலே என்று பல பிரிவுகள் காட்டாமல் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு, மக்களை வெற்றி பெறச் செய்வதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கப்பட்ட மக்கள் ஆதரவை விட அதிகமான ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.


பாட்பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலங்கள் குறித்து காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வையும், விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை ஐயாயிரம் ரூபாவுக்கும், மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் நிவாரணத்தையும் வழங்குவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


☎️ எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நாட்டிற்கு ஒரு பெருமதியை சேர்த்திருப்பது ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமாகும்.


76 வருட வரலாற்றுக் காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டிற்கு சேவை செய்திருப்பது ஐக்கிய மக்கள் சக்தியாகும். பிரபஞ்சம், மூச்சு போன்ற வேலைத்திட்டங்களின் ஊடாக பாடசாலைகளுக்கு பஸ் வண்டிகளையும் ஸ்மார்ட் வகுப்பறை உபகரண தொகுதிகளையும், வைத்தியசாலைகளுக்கு தேவையான உபகரணங்களையும் பெற்று கொடுத்தது ஐக்கிய மக்கள் சக்தியாகும். அதிகாரம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இந்த வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து சகல வசதிகளையும் கொண்ட கல்வி முறையையும் சுகாதார கட்டமைப்பையும் உருவாக்கி, மக்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவோம். அறிவை மையமாகக் கொண்டு பொருளாதாரத் திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை உருவாக்கி சர்வதேச மொழி கல்வி, கணிணி விஞ்ஞானம், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளை விருத்தியடையச் செய்வோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.


No comments

Powered by Blogger.