Header Ads



பொலிஸாரின் மோசமான செயல்


கொழும்பு, முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடிய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் புளுமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் நால்வரும் முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதன்போது வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி 1.4 மில்லியன் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.