Header Ads



மூத்த சட்டத்தரணி சடலமாக மீட்பு


- எம் . றொசாந்த் -


யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


திருநெல்வேலியை சேர்ந்த கனகசபாபதி நமநாதன் (வயது 86) எனும் சட்டத்தரணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் , வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். 


அந்நிலையில்   திங்கட்கிழமை (09) இவருக்கு உணவு கொண்டு சென்றவர் , வீட்டில் இவரது நடமாட்டத்தை காணாது , அயல்வீட்டுக்காரர்களுக்கு அறிவித்து , வீட்டினுள் சென்று பார்த்த போது அவர் நிலத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 


அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது 


சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.