Header Ads



சவூதியில் உயிரிழந்தவரின் ஜனாஸாவை, மீட்டுத் தருமாறு உருக்கமான கோரிக்கை


வவுனியா - ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசிக்கும், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவுதிநாட்டில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவிக்கையில்,


எனது மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் அநுராதபுரம் பகுதியில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாக சவுதி அரேபியாவிற்கு சென்றார். பயணம் செய்த நாளில் இருந்து இதுவரை காலமும் சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார். அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை.


கடந்த சில நாட்களாக தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்குமாறும் கூறினார்.


இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை. இந்நிலையில் எனது மனைவி சிலநாட்களாக என்னுடன் தொடர்பினை ஏற்படுத்தவில்லை. நாம் முகவரை அணுகியபோது அவர் சுகவீனமடைந்து இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.


அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டது. தற்போது மரணமடைந்து 40 நாட்கள் கடக்கின்ற நிலையில், எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.


எனவே அவரது சடலத்தையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.


குறித்த சம்பவத்தில் நிலூபா வயது 38 என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். ibc

No comments

Powered by Blogger.