Header Ads



வெற்றியை அமைதியாக கொண்டாடவும், அதிக அவமரியாதை, இழிவுபடுத்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளராக சஜித்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றியீட்டுவது நிச்சயம் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதியாக தெளிவாகும் சஜித் பிரேமதாசவின் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறும் தோல்வியடைந்தவர்களை கௌரவமாக நடத்துமாறும் அவர் கோரியுள்ளார்.


இந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் மிக அதிகமாக அவமரியாதை செய்யப்பட்ட இழிவுபடுத்தப்பட்ட ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அடையாளப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


ஏனைய தரப்பினர் தங்களது ஆயுதமாக சஜித் பிரேமதாச மீது சேறு பூசல்களை மேற்கொண்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி நாகரீகமான முறையில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.


எவ்வளவு இழிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தவர்கள் வன்முறையையோ அல்லது நீதியற்ற இழிவுபடுத்தல்களையோ பதிலுக்கு செய்யக்கூடாது என அவர் கோரியுள்ளார். 

No comments

Powered by Blogger.