Header Ads



ஜனாதிபதி அனுரவிற்கு, றிசாத் அனுப்பியுள்ள கடிதம்


மன்னார் பிரதான வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மது விற்பனை நிலைய அனுமதி பத்திரத்தை ரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


குறித்த மதுபானசாலை பாடசாலை , ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள விடயமானது குறித்த பகுதி மக்களிடையே பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.