Header Ads



காசா குறித்து முக்கிய பேச்சு


துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இன்று ஞாயிற்றுக்கிழமை, 1 ஆம் திகதி  சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி அழைப்பில் காஸா மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்துள்ளார்கள்.


இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், நிரந்தரமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறிய ஜனாதிபதி எர்டோகன், இந்த விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்' என்று எர்டோகனின் அலுவலகம் X இல் பதிவிட்டுள்ளது.


அதிகாரப்பூர்வ சவூதி பிரஸ் ஏஜென்சி,


'இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் மிருகத்தனமான ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும் அரபு மற்றும் இஸ்லாமிய முயற்சிகளை ஒருங்கிணைக்க சவுதி ராஜ்யத்தின் ஆர்வத்தை துருக்கிய ஜனாதிபதியுடனான தொலைபேசி அழைப்பில் முகமது பின் சல்மான் உறுதிப்படுத்தினார் என்று கூறியது.

No comments

Powered by Blogger.