Header Ads



ஒரு முஸ்லிமை தேடி வைத்திருப்பது உயர்வானது...


தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. ஒருவர் வெற்றீயீட்டப் போகிறார். பலர் தோல்வியடைவார்கள். எனினும் நாம் புனித கலிமாவை மொழிந்த முஸ்லிம்கள். 


அரசியலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்களுக்காக, இந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக மற்றுமொரு முஸ்லிம் சகோதரருடன் பகைப்பது, உறவை துண்டிப்பது, விரோதம் கொள்வது எல்லாம், ஆகுமான காரியங்கள் அல்ல. 


வெற்றியீட்டும்  எந்தவொரு வேட்பாளரும், நமக்காக பிரார்த்திக்கப் போவதில்லை. கபுறுக்குள் நம்மை வைத்த பின்னர், நமக்காக அங்கு மையவாடியில் நின்று, அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கப் போவதில்லை. 


இவர்களை விட,  நமக்காக பிரார்த்திக்கும்  ஒரு முஸ்லிமை தேடி வைத்திருப்பது உயர்வானது. 


எனவே யதார்த்தங்களை புரிவோம். அரசியலுக்காக மற்றுமொரு சகோதரரை வெறுப்பது, பகைப்பது, மனதை நோகடிப்பது ஆகிய பாவச் செயல்களில் இருந்தும் விடுபடுவோம்.  அவற்றில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாக்கட்டும்.  


அரசியலை வெறியாக்குவதைவிட, அவரவருக்குள்ள உரிமைகளின் படி, அவரவர்  விருப்பத் தேர்வுகளை அஙகீகரிப்போம். 


நமக்கு கருத்துக்கூற சுதந்திரம் உள்ளது போன்றுதான், மற்றவர்களுக்கும் கருத்துக்கூற, சுதந்திரமுள்ளதை மனிதர்களாக நின்று மதிப்போம்.  


நமது சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயன் தரும் ஒருவர் ஜனாதிபதி ஆவதற்காக பிரார்த்திப்போம்.


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.