Header Ads



காசாவில் உள்ள கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருமாறு இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம்


காசாவில - ரபாவில் இஸ்ரேலிய கைதிகளின் மரணத்திற்குப் பிறகு டெல் அவிவில் 5 இலட்சம் எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.


காசாவில் எஞ்சியிருக்கும் கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகு இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று டெல் அவிவில் அவர்கள் தடுத்த ஒரு சாலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டார்கள்.


சனிக்கிழமையன்று காசாவில் சுரங்கப்பாதையில் இருந்து ஆறு கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து லட்சக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.