லெபனானில் பல ஆயிரம் பேர் இடப்பெயர்வு, தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
இஸ்ரேலிய தாக்குதல்களால் சமீப நாட்களில் லெபனானில் குறைந்தது 90,530 பேர் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களில் கிட்டத்தட்ட 40,000 பேர் 283 இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐநா நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
அதேவேளை லெபனான் மீது சாத்தியமான தரைத் தாக்குதலுக்கான வழியைத் தயாரித்து வருவதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
ஹெஸ்பொல்லாவின் உள்கட்டமைப்பை அழிப்பதற்காகவும், சாத்தியமான தரைவழித் தாக்குதலுக்கு வழியைத் தயாரிப்பதற்காகவும், லெபனான் மீதான வான்வழித் தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலிய இராணுவத்திடம் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment