Header Ads



அனுரகுமார முன்னிலையில் இருப்பதாக, போலி தரவுகளை வௌியிடுகிறார்கள் - அசாத் சாலி



சம்மாந்துறை பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற 'இயலும்  ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு முன்னாள் ஆளுநர் எம்.அசாத் சாலி ஆற்றிய உரை


"கடன் செலுத்த முடியாத நாட்டை மீட்டெடுத்து இந்தளவு மக்களை கொண்டு கூட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதே பாரிய வெற்றியாகும். சஜித் அணியில் இறுதியாக 20 பேர் மட்டுமே எஞ்சப் போகிறார்கள்.  ஏனையோர் ஜனாதிபதியுடன் கைகோர்க்கவுள்ளனர். 


அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக போலி தரவுகளை வௌியிடுகிறார். ஜே.வி.பியின் வரலாறுகள் மக்களுக்கு இன்றும் மறக்கவில்லை. அவ்வாறானவர்களிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா.?


மறுமுனையில் சஜித் பிரேமதாச சம்மாந்துறையில் 300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரையில் வீடுகள் கட்டவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து ஜனாதிபதியாக இருக்கின்றார். அவற்றை வெற்றிக்கொள்ளும் சர்வதேச தொடர்புகளும், நாட்டின் செயற்பாடுகள் பற்றிய அறிவும் பாராளுமன்றத்தில் வேறு எவருக்கும் இல்லை." என்றார்.

No comments

Powered by Blogger.