Header Ads



80 Mp க்கள் நாட்டை விட்டு, வெளியேற டிக்கெட் பதிவு


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையின் காரணமாக SLPP எம்பிக்கள் 80 பேர் நாட்டை விட்டு வெளியேற டிக்கெட் பதிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் விக்ரமசிங்க வெற்றிபெற மாட்டார் என்பதை அறிந்ததன் காரணமாகவே இந்த எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளனர் என ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.


“விக்கிரமசிங்க அனுரகுமார திஸாநாயக்கவை ஊக்குவிப்பதால், SJB வேட்பாளர் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உறுதி செய்வதாகவே தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.


No comments

Powered by Blogger.