Header Ads



இலங்கை கடற்படையின் அதிரடி - 8 மாதங்களில் 15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்கள் பிடிபட்டன


கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (08) வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


கடற்படையினரால் சுமார் 385 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் பெறுமதி 9,631 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 4,860 மில்லியன் ரூபாய் பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


மேலும், அந்தக் காலப்பகுதியில் கேரள கஞ்சா, ஹஷிஸ், போதை மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்களையும் கடற்படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.


அத்துடன். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 162 பேரும், 11 படகுகளும் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.